என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் பிடிபட்ட பாம்பு
Byமாலை மலர்2 Aug 2023 10:47 AM IST
- நீர்வீழ்ச்சி அருகே பச்சை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது.
- தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அப்பகுதியில் இருந்த விஷத்தன்மை அதிகம் கூடிய பச்சைப்பாம்பை பிடித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதி பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இதில் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பிரதான சாலையில் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் நீர்வீழ்ச்சி அருகே பச்சை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அப்பகுதியில் இருந்த விஷத்தன்மை அதிகம் கூடிய பச்சைப்பாம்பை பிடித்தனர். மேலும் பிடிப்பட்ட பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X