என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/10/1819744-10.webp)
X
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
By
மாலை மலர்10 Jan 2023 2:30 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
- 300 விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவிட்டு தென்னங்கன்றுகளை பெற்று சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் வேளாண் அனுபவ பணிக்காக வந்திருக்கும் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தீபிகா, தம்மஸ்ரீ, தீபிகா, தனுஷா, தர்ஷினி, திவ்யா, திவ்யசரிகா, இலக்கியா, இனிதா, காயத்ரி கிருஷ்ணகுமார் ஆகியோர் வேளாண்மை இயக்குனர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு இரண்டு தென்னம் கன்றுகளை வழங்கினர்.
இந்த விழாவை வேளாண்மை இயக்குனர் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை உதவி அலுவலர் பெட்ரிக் இளையராஜா இந்த முகாமை வழிநடத்தி தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இந்தச் திட்டத்தின் கீழ் 300 விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவிட்டு தென்னங்கன்றுகளை பெற்று சென்றனர் .
Next Story
×
X