search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.
    • 12 ரெயில் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும்.

    தஞ்சாவூா்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இயக்கப்படுகிறது.

    திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்-06008) பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் துறைமுகம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு சென்று அடையும்.

    இந்த ரெயிலில் 12 ரெயில் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். எனவே, பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர்.
    • விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா?

    தஞ்சை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்று விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு நல உதவியாக புடவைகள் வழங்கினார்.

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மேல வீதியில் 50 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர். மேலும், கட்சி நிர்வாகி ஒருவரின் புதிய காரில் கட்சிக் கொடியை பொருத்தினார்.

    இந்த நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

    மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடியில் கொடி ஏற்றிய பின்னர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கமாகவும், இலக்காக உள்ளது. முதல்-அமைச்சர் நாற்காலியில் நிச்சயம் விஜய் அமருவார். இதற்காக தொண்டர்கள் அனைவரும் கட்சி பணி ஆற்றிட வேண்டும்.

    தொண்டர்கள் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா? அல்லது பொழுதுபோக்கு படமா? என்று இப்போது கூறமுடியாது. தற்போது கட்சி கொடியேற்று விழாவிற்கு வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புஸ்ஸி ஆனந்த் வருகையை யொட்டி மயிலாடுதுறை மேலவீதி பகுதியில் கட்சியினர் அலங்கார வளைவு அமைத்திருந்தனர்.

    அப்பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்ததாக கூறி, அதனை அகற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
    • 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.

    என்னைவிட அ.தி.மு.க. வரலாறு பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.

    அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறியிருந்தேன். ஆனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக ஒன்றிணையும். 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. நான் கட்சி வேஷ்டி கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கும்பகோணம்:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரி நாக்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிபேட் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், சுதா, பா.ஜனதா நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் வரவேற்றனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விக்கிரவாண்டி 4 வழி சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்களை அறிய தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை 4 வழி சாலை திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு திருச்சி சென்று விமானம் மூலம் நாக்பூர் செல்கிறார்.

    மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை.
    • அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அவருக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருக்கிற அ.தி.மு.க. தொண்டர்களில் 100 சதவீதத்தில் 99.9 சதவீதம் பேர் அ.தி.மு.க. இணைய வேண்டும். 2026-ல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி ஏற்படும்.

    நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தலில் அவர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அழித்து விடுவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். உண்மையும் அதுதான். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்கள் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். அன்றைக்கு நாம் தனித்து நின்று 150 இடத்திற்கு மேல் வந்து விடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதுபோல பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வரும், 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று விடலாம் என்று கூறினார். ஆனால், 20 சதவீத வாக்குகள் வரும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்.
    • பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும்.

    சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை விதைக்கும் நோக்கில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படடு வருகிறது.

    இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு கூறியுள்ளது. அதனை பின்பற்றியே தமிழக முதலமைச்சர் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்."

    "பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். விரைவாக இது தொடர்பாக கமிட்டி அமைக்கப்படும். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார். 

    • இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முகூர்த்த நாள், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு பேராசிரியை தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி செயல் பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுநிலை 2-ம் ஆண்டு பேராசிரியை தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் மாதவியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுகுறித்து இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி, கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என் கல்லூரி முதல்வர் மாதவி சுற்றறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியை ஈரோடு தாளவாடி அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கல்லூரி கல்வி இயக்குநரின் உத்தரவை தொடர்ந்து வழக்கம்போல் இன்று கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேராசிரியை சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
    • கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலை கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ கடந்த மாதம் 18-ந்தேதி வகுப்பறையில் மாணவர்களை அவமதித்ததாக புகார் எழுந்தது.

    பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ சாதி ரீதியாக பேசியதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கும்பகோணம் கலை கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களை சாதிப்பெயர் கூறி திட்டிய பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் போராட்டம், மாணவர்களின் தொடர் வகுப்பு புறக்கணிப்பு காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு. இந்த சம்பவம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே அண்ணாமலையின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதோடு எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.

     


    முன்னதாக தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்தது. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கண்டித்து அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தான் அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது உருவபொம்மையை எரித்து போராடியுள்ளனர்.

    • திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்ற ரக்‌ஷாபந்தன் விழா.
    • தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து- ஆனந்தி தம்பதியின் மகள் சந்தியா (வயது 14). இவர் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ரக்சாபந்தன் விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன்படி, தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கல்வித்திறன் மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவி சந்தியாவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவர் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ரக்சாபந்தன் வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

    இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவி சந்தியாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    • ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (15), பிரேம் குமார் (14) ஆழமாஜ பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினர்.

    ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×