search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தற்கொலை
    X

    இளம்பெண் தற்கொலை

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் அனுஸ்ரீ (வயது 26). இவருக்கும் நைனா காடு பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அனுஸ்ரீ பெற்றோர் வீட்டில் குடியிருந்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×