search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
    X

    ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

    • 51 வகையான சீர்வரிசை பொருட்கள் மேளத்தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வடரங்கம் கிராமத்தில் ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக திரளான பக்தர்கள் 51 வகையான சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேளத்தாளங்கள் முழங்கிட கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து பெருமாள் தாயார் எதிர்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    அதன் பின்னர் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.

    பாலாஜி பட்டாச்சாரியார், ரமேஷ் குருக்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மங்களநாணை அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை சேலத்தைச் சேர்ந்த அயோத்தியாபட்டினம் ஸ்ரீ சன்னியாசி ரிஷி மடம் மற்றும் சத்ய நாராயணன் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×