என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
- வாணியம்பாடியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் வாணியம்பாடிக்கு வருகை தந்தார்.
அவரை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பிரபாகரன், செயலாளர்கள் டாக்டர் தே.செந்தில்குமார், டாக்டர் எஸ் பசுபதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் மாநில அளவிலான அரசு மருத்துவர்கள் சங்க பணிகள், மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். சிவசுப்பிரமணிக்கு பொன்னாடை அணிவித்து மாநில தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரசு டாக்டர்கள். டேவிட் விமல் குமார், பார்த்திபன், நேதாஜி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story