search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணன்-தம்பியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
    X

    அண்ணன்-தம்பியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

    • கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை
    • திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை வ.உ.சிநகர் பகுதியில் வசிப்பவர் ரத்னசிங். எலக்ட்ரீசியன். இவரது மகன்கள் சதீஷ்சிங் (வயது 23), சந்து ருசிங் (21) ஆகியோர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் புறப் பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கீழ்பென்னாத்தூர் இந் திரா நகர் பை-பாஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

    இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (24), அங்குள்ள சமத் துவபுரத்தில் வசிக்கும் தியாகராஜன் (20), சதீஷ்குமார் (19) ஆகியோர் இவர்களிடம் செல்ாேன்களை பித்து விட்டு தப் பியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் சதீஷ்சிங் மற்றும் சத்ருசிங்கிடம் செல்போன்களை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கர வர்த்தி ஆகியோர் கைது செய்து செல்போன்களை மீட்டனர். பின்னர் 3 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×