என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
இரும்பு வியாபாரி வீட்டில் நகை கொள்ளை

- 8 பவுன் தங்க நகை 2 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை அள்ளி சென்றனர்
- தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தாதுசாகிப் தெருவை சேர்ந்தவர் ஜாகிர்உசேன் பழைய இரும்பு வியாபாரி.
நேற்று மதியம் நேரத்தில் அருகில் உள்ள தங்களின் மற்றொரு வீட்டிற்கு செல்வதற்காக வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
மேலும் மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 8 பவுன் தங்க நகை 2கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து இரும்பு கடை வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கபட்டு கைரேகை தடயத்தை சேகரித்து விசாரணை மேறகொண்டனர்.
ஆரணியில் கடந்த 20 நாட்களில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்தும் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் வழிப்பறி செய்த சம்பவம் தொடர்கதையாக நடந்தேறி வருகிறது.
தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.