search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல் பயிற்சி
    X

    புதிய நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல் பயிற்சி

    • நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவை பயன்படுத்துவோம்.
    • இயற்கை முறையில் சாகுபடி செய்வதை பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிவரும் வேளாண்மை பாரம்பரியம் மற்றும் புதிய நெல் ரகங்களை ஊக்கப்படுத்ததுல் பயிற்சி பந்தநல்லூரில் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலெட்சுமி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் நளினி முன்னிலை வகித்தார்.

    கதிராமங்கலம் முன்னோடு விவசாயி ஸ்ரீராம் 75 பாரம்பரியம் புதிய நெல் ரகங்களையும் அதன் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ குணங்களையும் பற்றி மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    40 பாரம்பரியம் புதிய நெல் ரகங்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, மரதுண்டி, நிச்சிலிசம்பா, வாலஞ்சம்பா, குள்ளங்கார், பவானி, நீலஞ்சம்பர், நாட்டுப்பொன்னி சிறுமிளகு சிவப்புகவுனி, சம்பா, காளாண் நமக்1, செம்பாலை மாபாபிளாக், தூரியமல்லி, பால்குடை வாழை, திருப்பதி சாரை கருவாச்சி, மருமுமூங்கி, ஆணைகொம்பன், ஆத்தூர் கிச்க்ஷ, நவரா, ஆற்பாடு சிச்சடி, முற்றின சன்னம், கண்பாலை, ரத்த சாளி செந்நெல், சொர்ணாமகூரி, துளசி வாசனை, குதிரைவாலி சம்பா, சேலம்சென்னா, குடவாழை, கருப்பகவுனி, கருடன்சம்பா, கூப்பாலை. ஆகியவை ஆகும்.மேலும் பாரம்பரியம் நெல் ஜெயராமனின் பாதுகாப்பு மையத்திலிருந்து அசோகள இயற்கை முறையில் சாகுபடி செய்வதை பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

    வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் மற்றம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும் பாரம்பரியம் நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவை பயன்படுத்துவோம் என்பதை எடுத்துரைத்தார்.

    இறுதியாக அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் செய்தார்.

    Next Story
    ×