search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • தோழி திருமணத்துக்கு சென்ற இளம்பெண் மாயமாகி உள்ளார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    பெரிய மிளகு பாறை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகள் பவித்ரா (வயது 23). பட்டதாரியான இவர், சம்பவத்தன்று சேலத்தில் உள்ள தமது தோழி திருமணத்துக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவரது தாயார் இந்திரா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் மாயமான பவித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×