search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தீபாவளியின் போதுகாலாவதி இனிப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைஉணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை
    X

    தீபாவளியின் போதுகாலாவதி இனிப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைஉணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை

    • தீபாவளியின் போது காலாவதி இனிப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
    • உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை


    திருச்சி,


    தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் நிரந்தர மற்றும் தற்காலிகத் தயாரிப்பு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சியில் நடந்தது.


    இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-


    இந்த தீபாவளி பண்டிகையின் போது பழைய இனிப்பு வகைகளை விற்பனை செய்ய கூடாது. குறிப்பாக காலாவதி தேதியை சரியாக பார்த்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யுங்கள். மேலும் தயாரிப்பாளர்கள் புற்றுநோயை வரவழைக்கக் கூடிய அளவுக்கு உணவு பொருட்களில் கலரிங் பயன்படுத்தக் கூடாது. திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


    உற்பத்தி மற்றும் காலாவதி தேதியில்லாத பொருட்களை விற்பனை செய்ய கூடாது. கலப்பட இனிப்பு வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் யாராவது கையூட்டு கேட்டால் தைரியமாக நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.




    Next Story
    ×