search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதவை தாய்-மகன் மீது கொலைவெறி தாக்குதல்
    X

    விதவை தாய்-மகன் மீது கொலைவெறி தாக்குதல்

    • விதவை தாய்-மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • தம்பதி மீது வழக்கு; கணவன் கைது-மனைவி ஓட்டம்

    திருச்சி

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அஞ்சலை (வயது 43). கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சங்கர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு அருண்குமார் (21) என்ற மகனும், துர்காதேவி (19) என்ற மகளும் உள்ளனர்.

    வறுமையின் காரணமாக அஞ்சலை சித்தாள் வேலைக்கு சென்று வருகிறார். அஞ்சலை குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் (43) மற்றும் அவரது மனைவி லதா (38) தம்பதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அஞ்சலை சித்தாள் வேலைக்கு செல்வதற்காக கண்ணன் வீட்டை கடந்து சென்றார். அப்போது கண்ணன் மற்றும் அவருடைய மனைவி லதா இருவரும் சேர்ந்து அஞ்சலையை ஜாடைமாடையாக திட்டியுள்ளனர். இதனை அஞ்சலையின் மகன் அருண்குமார் மற்றும் அஞ்சலை இருவரும் தட்டி கேட்டபோது வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    Next Story
    ×