என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியிலிருந்து கண்ணூருக்கு புதிய விமான சேவை
    X

    திருச்சியிலிருந்து கண்ணூருக்கு புதிய விமான சேவை

    • திருச்சியிலிருந்து கண்ணூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது
    • டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது

    திருச்சி:

    திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, பகரீன், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, புதுடெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிக்கும் விதமாக இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவையாக கேரள மாநிலம் கண்ணூருக்கு புதிய விமான சேவை இயக்கப்பட உள்ளது.

    இந்த விமான சேவையானது தினம் தோறும் மாலை 3.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 6:45 மணிக்கு கண்ணூர் விமான நிலையத்தை அடையும் எனவும் கண்ணூர் விமான நிலையத்திலிருந்து இரவு07.05 மணிக்கு புறப்பட்டு இரவு10.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என தெரியவருகிறது. இந்த சேவை டிசம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே திருச்சியிலிருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விமான சேவை இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×