என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் சோதனை

- வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடவடிக்கை
வேலூர்:
நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு காட்பாடி ெரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் காட்பாடி வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.