search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி
    X

    கிரிக்கெட் போட்டியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் நறுவீ சம்பத்.

    வேலூரில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
    • வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும்

    வேலூர்:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

    மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி என 8 மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு 5 நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மண்டலம் 'பி-யில் அடங்கிய வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் வேலூர் நறுவீ மருத்து வமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்த படியாகும் என்று வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து போட்டியா ளர்களை வாழ்த்தினார்.

    இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவர் கூத்தரசன், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய் விக்னேஷ்வரன், துணைத் தலைவர்கள் கிருஷ்ண குமார். கங்காதரன், இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முதல் போட்டியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. கிரிக்கெட் போட்டிகளை சென்னையை சேர்ந்த் கே.எச். கோபிநாத் நடுவராக இருந்து வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்கிறார்.

    மாவட்டங்க ளுக்கு இடையிலான மாநில அளவிலான இப்போட்டி யில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்கும்.

    Next Story
    ×