search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேலூரில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்
    X

    வேலூரில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்

    • 33 கடைகள் வரி பாக்கி
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை பாக்கி உள்ளிட்டவைகளை மாநகராட்சி அதிகாரிகள் வசூல் செய்து வருகின்றனர்.

    தற்போது வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக 1200 கடைகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 33 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர்.

    வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு மட்டும் இன்று சீல் வைத்தனர்.

    Next Story
    ×