என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் தடையை மீறி வைத்த விநாயகர் சிலை அகற்றம்
- இருந்தபோதும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி தாங்களே எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.
திண்டுக்கல்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இருந்தபோதும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து அதனை நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். மேலும் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளம் முழங்க எடுத்துச் சென்று அதனை கரைக்க வந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் வரவே டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், தரசில்தார் செழியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைநதனர்.
அனுமதி வழங்கப்படாத இடத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்ாான சூழல் நிலவியது. போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி தாங்களே எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.
மேலும் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் மற்றும் சங்கர் கணேஷ் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.