என் மலர்
உள்ளூர் செய்திகள்
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- விருதுநகரை சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் இயற்கை விவசாய சாகுபடி யில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப் படுவதோடு மண்வளத்தை யும் பாதுகாப்பது விவசாய சாகுபடியாகும்.
வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர் கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர் கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால், மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை உறுதி படுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்ட ணம் ரூ.100 செலுத்த வேண் டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டி ருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும்.
மாநில அளவில் வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 இலட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.