search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல்; 3 பேர் கைது
    X

    பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல்; 3 பேர் கைது

    • பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சாத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்மசங்கர்(வயது37). இவர் மதுரை-சிவகாசி ரோட்டில் உள்ள கொங்கலாபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கீழத்திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கணேசன்(34) என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி டி.கே.எஸ். ஆறுமுகம் ரோட்டை சேர்ந்தவர் முருகன்(48). இவர் சட்டவிரோதமாக கருந்திரிகளை பதுக்கி வைத்ததாக மாரனேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவரிடம் இருந்து 80 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×