search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகுதிநேர நியாயவிலை கடை- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    ரேசன் கடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கினார்.

    பகுதிநேர நியாயவிலை கடை- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • பகுதிநேர நியாயவிலை கடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கம்மாப்பட்டி கிராமத்தில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடை தொடங்கப் பட்டுள்ளது. இதை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் ஊர் நாட்டாண்மை, பகுதிநேர நியாய விலைக்கடைக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைக்கு ஊரில் அரசு புறபோக்கு நிலம் இருக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சொந்த கட்டிடம் கட்டி தருவதாக உறுதியளித்தார்.

    ராஜபாளையம் தொகுதி யில் எங்கெல்லாம் பகுதிநேர விலைக்கடை தேவைப் படுகிறதோ அங்கெல்லாம் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இந்த நிகழ்வில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பாஸ்கர், மேலாண்மை இயக்குநர் மாரீஸ்வரன், சார்பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டார வழங்கல் அலுவலர் ராம நாதன், கவுன்சிலர் அனுசுயா கண்ணன், கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×