search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    பானுமதி.

    உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    • சாத்தூர் அருகே இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
    • போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பானுமதி (வயது 25). இவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்ற சதீஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    சதீஷ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பானுமதி கணவருடன் செல்போனில் பேசியபோது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பானுமதி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.

    இந்த நிலையில் பானுமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதியின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுதொடர்பாக அப்பநாயக்கன்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்தபின் பானுமதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலையும் வாங்க மறுத்துவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டி.எஸ்.பி. வினோஜ், கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.

    மகளின் சாவு குறித்து அவரது தாயார் கனகலட்சுமி, மருமகன் சதீஷ், அவரது தம்பி தமிழ்செல்வன், மாமனார் சூரியவேல், மாமியார் முருகேஸ்வரி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×