என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர்: மழை அளவு
- விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்.
- சூறை காற்றுடன் பெய்த பலத்த மழையில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகாசி 11, விருதுநகர் 20.8, ராஜபாளையம் 20, காரியாபட்டி 30.2, வெம்பக்கோட்டை 23.2, கோவிலாங்குளம் 19.8. மாவட்டத்தில் 175 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
Next Story