search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மழை நீரில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
    X

    மழை நீரில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

    • சேற்றில் கால் சிக்கியதால் தவறி வயலில் தேங்கிய தண்ணீரில் விழுந்துள்ளார்.
    • மீண்டு எழ முடியாமல் தண்ணீரில் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45).

    தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள கதிர் விஸ்வலிங்கம் என்பவருக்கு சொந்தமான 20 ஏக்கர் விலை நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இரண்டு நாட்களாக மழை பெய்த நிலையில் வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக இன்று வரப்புகளை வெட்டி அகற்றும் பணியை கனகராஜ் மேற்கொண்டுள்ளார்.

    அப்பொழுது மழையின் காரணமாகவும் சேற்றில் சிக்கியதால் தவறி வயலில் தேங்கிய தண்ணீரில் விழுந்துள்ளார்.

    சேற்றில் சிக்கியதால் மீண்டு எழ முடியாமல் தண்ணீரில் மூச்சு திணறி அங்கேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும்

    பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விவசாய கூலி தொழிலாளியான கனகராஜ் இறந்த சம்பவம் காத்திருப்பு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×