search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது
    X

    ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

    • சுப்புக்குட்டி என்ற கார்த்திக் கஞ்சா பவிற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கார்த்திக் வீட்டில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது சோதனையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சுப்புக்குட்டி என்ற கார்த்திக்(வயது 28). இவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கார்த்திக் தனது வீட்டில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×