search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கால்பந்து போட்டியில் பட்டாசு வெடித்து விபத்து- 30 பேர் காயம்
    X

    கால்பந்து போட்டியில் பட்டாசு வெடித்து விபத்து- 30 பேர் காயம்

    • கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர்.
    • பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் பட்டாசுகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மலப்புரத்தில் உள்ள அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் யுனைடெட் எப்சி நெல்லிக்குத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்துள்ளது.

    கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் இருந்த பகுதியில் சிதறின. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,

    கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்தது.

    பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

    Next Story
    ×