search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

    • ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
    • ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    தோடாவின் தேசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையே நேற்றிரவு முதல் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.

    பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தொடங்கிய பயங்கரவாத தாக்குதல்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயங்கரவாதம் இல்லாத பகுதியான ஜம்மு முழுவதும் தற்போது பரவியுள்ளது.

    ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×