search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஜம்மு காஷ்மீரில் நாளை 3-ம் கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்கு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் நாளை 3-ம் கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்கு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

    • 40 தொதிகளுக்கு நாளை 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • வாக்குமையங்களுக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

    ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 18-ந்தேதி முதற்கட்டமாக 24 தொதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 25-ந்தேதி 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

    வாக்கு எந்திரங்கள் வாக்கு மையத்திற்குச் சென்றதும் நாளை காலை வாக்குப்பதிவுக்கு முன் மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு எந்திரம் சரியாக வேலை செய்கிறதா? என முகவர்கள் முன் வைத்து பரிசோதிக்கப்படும். அதன்பின் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

    குப்வாரா துணை கமிஷனர் கூறுகையில் "குப்வாரா மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 4 மையங்களில் இருந்து அனுப்பப்படுகினற்ன. பலத்த பாதுகாப்புடன் 622 வாக்கு மையங்களுக்கு அதிகாரிகள் வாக்கு எந்திரங்களை கொண்டு செல்கின்றனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பிங் மையம், ஒரு க்ரீன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×