search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலுக்காக கட்டிய ஓட்டல்-மனதை வருடும் காதல் கதை
    X

    காதலுக்காக கட்டிய ஓட்டல்-மனதை வருடும் காதல் கதை

    • மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
    • ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.

    எனது பெற்றோரின் காதல் கதை என்று ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    சமீர் ரிஷூ மொஹந்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெற்றோரை பற்றிய மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.

    அவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் ஜப்பானை சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த மொஹந்தி பதிவிட்டுள்ள வீடியோவில், எனது தாயார் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் கல்லூரியில் படிக்கும் போது உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஒடிசா மாநிலம் பூரி பகுதிக்கு வந்த அவருக்கு அந்த பகுதி மிகவும் பிடித்துப் போனது. இதனால் படிப்பை முடித்த பிறகு பூரியில் குடியேற விரும்பிய அவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதினார். ஆனாலும் போதிய வருமான ஆதாரம் இல்லை. எனவே பூரி பகுதியில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டல் கட்ட விரும்பினார்.

    ஆனால் எனது தாய் வெளிநாட்டவர் என்பதால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை. அப்போது தான் எனது தந்தையை சந்தித்துள்ளார். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கு ஓட்டலை கட்டினர். அந்த ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.

    இந்த ஓட்டல் எனது தாய்-தந்தையின் காதல் கதைக்கு ஒரு சான்று. சில காதல் கதைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது உண்மை தான் என்று முடித்தார். அவரது இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×