search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது- பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
    X

    'தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது'- பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

    • அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
    • இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்த்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் டவழக்கு தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.

    டாக்டர்களின் பாதுகாப்பைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்தியா முழுவதிலும் மருத்துவரின் பாதுகாப்பு குறித்து முறையான பிரச்சினை எழுப்புவதால் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல முடியாவிட்டால், வேலை நிலைமைகளில் பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சமத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும்.

    பணிபுரியும் இடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே இருக்கிறது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான இளம் டாக்டர்கள் 36 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப் படுத்த தேசிய நெறி முறையை உருவாக்க வேண்டும்.

    இதற்காக 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை நாங்கள் அமைக்கிறோம். இக்குழுவினர் நாடு முழுவதும் டாக்டர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பரிந்துரைப்பார்கள். இந்த குழு 3 வாரத்துக்குள் தனது இடைக்கால அறிக் கையை சமர்பிக்க வேண்டும். இறுதி அறிக்கையை 2 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது.

    டாக்டர்களை பாதுகாக்க மாநிலத்தில் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. டாக்டர்களுக்கு கழிவறை வசதி இல்லை. டாக்டர்கள் நீண்ட நேரம் பணி முடித்து வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆஸ்பத்திரிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் முறையாக இல்லை.

    ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கண்டறியும் ஸ்கிரீனிங் எந்திரமும் இல்லை. பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. இதற்காக பொறுப்பேற்று அந்த மாநில போலீஸ் டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போராட்டம் நடத்து மருத்துவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறை நிகழ்ந்தபோது விமானம் நிலையம், மருத்துவமனைகள நொறுக்கப்பட்டுள்ளன. இனியும் இப்படி நடக்கக் கூடாது.

    இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    Next Story
    ×