என் மலர்
இந்தியா
தேர்தல்களைக் கண்காணிக்க ஈகிள் குழு நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு
- தேர்தல்களைக் கண்காணிக்க ஈகிள் குழுவை அமைத்துள்ளது காங்கிரஸ்.
- இந்தக் குழுவில் அஜய் மக்கான், திக்விஜய சிங் உள்பட் 8 பேர் இடம்பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE)அமைத்துள்ளார்.
இந்தக் குழுவில் அஜய் மக்கான், திக்விஜய சிங், டாக்டர். அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்ரவர்த்தி, பவன் கேரா, குர்தீப் சிங் சப்பல், டாக்டர்.நிதின் ரவுத், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி ஆகியோர் உறுப்பினர்கள் உள்ளனர்.
முதலில் மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் மோசடி பிரச்சனையை எடுத்துக்கொண்டு விரைவில் தலைமைக்கு விரிவான அறிக்கையை இந்தக் குழு சமர்ப்பிக்கும். மேலும், மற்ற மாநிலங்களில் கடந்த கால தேர்தல்களையும் பகுப்பாய்வு செய்யும்.
இந்தக் குழு வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பிற பிரச்சனைகளையும் முன்கூட்டியே கண்காணிக்கும் என தெரிவித்தார்.