search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு
    X

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு

    • குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
    • குடியரசு தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். நேற்று (வியாழக்கிழமை) டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இருவரின் சந்திப்பு குறித்து குடியரசு தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    குடியரசு தலைவரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்தித்தார்.

    டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுடன் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமின்றி கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளையும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். இவர்களது சந்திப்பும் குடியரசு தலைவர் மாளிகையில் தான் நடைபெற்றது. இதனை குடியரசு தலைவர் மாளிகை அதன் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×