என் மலர்
இந்தியா

JEE தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை: 'தேர்வை விட வாழ்க்கை பெரியது' என அதானி பதிவு

- தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது.
- படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஜேஇஇ தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவி பற்றி அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் கவுதம் அதானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"உங்கள் அனைவருக்கும் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது - தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது..." என்று தெரிவித்து உள்ளார்.
மாணவியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், "எதிர்பார்ப்புகளின் சுமையில் ஒரு நம்பிக்கைக்குரிய மகள் இப்படிச் செல்வதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது".
அந்த மாணவி தனது பெற்றோருக்கு "அவர்களின் கனவுகளை நிறைவேற்றாததற்கு" "மன்னிக்கவும்" என்று ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தார்.
வாழ்க்கைப் பாடத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், பெற்றோர்கள் தங்களிடமிருந்தும் தங்கள் குழந்தைகளிடமிருந்தும் அழுத்தங்களை விலக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
"வாழ்க்கை எந்தத் தேர்வையும் விடப் பெரியது - பெற்றோர்கள் இதைப் புரிந்துகொண்டு தங்கள் குழந்தைகளுக்கும் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் மனம் திறந்து கூறி உள்ளார். அதில்,
"நான் படிப்பில் மிகவும் சாதாரணமாக இருந்தேன்". மேலும் "படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்".
"ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை எனக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது" என்று கூறினார்.
अपेक्षाओं के बोझ तले दबकर एक होनहार बेटी का यूं चले जाना हृदयविदारक है।जीवन किसी भी परीक्षा से बड़ा होता है- यह बात अभिभावकों को खुद भी समझनी होगी और बच्चों को भी समझानी होगी।मैं पढ़ाई में बहुत सामान्य था। पढ़ाई एवं जीवन में कई बार असफल भी हुआ, लेकिन हर बार जिंदगी ने नया… https://t.co/3s1WnINLcb
— Gautam Adani (@gautam_adani) February 13, 2025