search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Jaishankar
    X

    ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு குறுகியகால ஒப்புதல் கோரினார்: மாநிலங்களவையில் ஜெய்சங்கர் பேச்சு

    • எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    வங்காளதேச விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மதியம் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு மிகக் குறுகியகால ஒப்புதல் ஒன்றை கோரினார்.

    அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    வங்காளதேசத்தின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா திரும்பியுள்ளனர்.

    ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

    வங்காளதேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கையையும் நாங்கள் பெற்றோம். அவர் நேற்று மாலை டெல்லி வந்தார் என தெரிவித்தார்.

    Next Story
    ×