என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
78வது சுதந்திர தினம்- நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை
- நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உரையாற்றி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலம் மூவர்ணக் கொடி பறப்பதைக் காணும்போது, நமது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது.
நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் பாடுபட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு அளப்பரியது.
நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பிர்சா முண்டா தொடங்கி பல பழங்குடியின தலைவர்கள் பாடுபட்டனர்.
இந்த நேரத்தில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இதே வேளையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுக்கூருகிறேன்.
மற்ற பண்டிகைகளை போல சுதந்திர தினம், குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்