search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் இருந்து மான்செஸ்டர், ஆம்ஸ்டர்டாமுக்கு நேரடி விமானங்களை இயக்கும் இண்டிகோ
    X

    இந்தியாவில் இருந்து மான்செஸ்டர், ஆம்ஸ்டர்டாமுக்கு நேரடி விமானங்களை இயக்கும் இண்டிகோ

    • ஜூலை மாதத்தில் இருந்து இரு நகரங்களுக்கும் இயக்க திட்டம்.
    • இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கவில்லை.

    இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கும், நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்கும் நீண்ட தூர நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதற்கும், இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கும் இது குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

    நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் 787 விமானத்தை குத்தகைக்கு எடுத்து நீண்ட தூர விமான போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில், ஐரோப்பிய சந்தையில் நுழைகிறது.

    ஏர்பஸ் A321 XLR விமானங்கள் இந்த வருடமும், A350-900 விமானம் 2027-ஆம் ஆண்டும் இண்டிகோவுக்கு டெலிவரி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மார்ச் 1-ந்தேதி போயிங் 787-9 என விமானத்தை நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் மேலும் மூன்று விமானங்களை குத்தகைக்கு வாங்க இருக்கிறது.

    ஆனால் எந்த நகரங்களில் இருந்து மான்செஸ்டர், ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவிக்கவில்லை.

    இங்கிலாந்து எங்களுக்கு முக்கியமான சந்தை. இந்தியாவில் இருந்து மான்செஸ்டருக்கு நேரடி விமான சேவை அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×