என் மலர்
இந்தியா

VIDEO: மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் துள்ளிக்குதித்து விளையாடும் எலிகள்

- குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி விளையாடுகிறது.
- இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நோயாளி வைத்திருக்கும் பொருட்கள் மீது எலிகள் துள்ளிக்குதித்து விளையாடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி ஓடி விளையாடுகிறது.
இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.
இந்த வீடியோ பரவியதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த பிரச்சனையை தீர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தது.
இதுதொடர்பாக மருத்துவ அதிகாரி டாக்டர் பிரவீன் உய்கே கூறுகையில், நாங்கள் தொடர்ந்து பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம், ஆனால் பிரச்சனை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த மாவட்ட அதிகாரி குழந்தைகள் வார்டை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்த அவர், உடனடியாக வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார்.
மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சம்பாதியா உய்கே, மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மூத்த மாவட்ட அதிகாரிக்கு அவர் அறிவுறுத்தினார்.
A shocking video from the #Mandla District Hospital in Madhya Pradesh has gone viral in which about a dozen rats are seen roaming freely in a #hospital ward. In the #viralvideo , about a dozen #Rats were seen near the head of a patient lying in bed.#MadhyaPradesh… pic.twitter.com/FCWNXTOhL2
— Surya Reddy (@jsuryareddy) March 8, 2025