என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு: மகா கும்பமேளா விழாவை நீட்டிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு: மகா கும்பமேளா விழாவை நீட்டிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/15/9345225-mahakumbmela15022025.webp)
லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு: மகா கும்பமேளா விழாவை நீட்டிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மாலை வரை 50 கோடி பக்கதர்கள் புனித நீராடியுள்ளனர்.
- பல கி.மீ. தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தொடங்கியது முதல் தினந்தோறும் லட்சணக்கான மக்கள் புனித நீராடி வருகிறார்கள்.
நேற்று மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். மொத்தம் 45 நாட்கள் விழாவான மகா கும்பமேளா வருகிற 26-ந்தேதி நிறைவடைகிறது.
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாகனங்கள் பல மைல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களால் புனித நீராட முடியுமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக மகா கும்பமேளா விழாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "இதற்கு முன்னதாக மகா கும்பமேளா, கும்பமேளா 75 நாட்கள் வரை கடைபிடிக்கப்பட்டது. தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியாது. இந்த சூழ்நிலையில் அரசு மகா கும்பமேளா விழா நாட்களை நீட்டிக்க வேண்டும்" என்றார்.
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கூட்டம் அலைமோதும் நிலையில், பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாலையில் பல கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் தத்தளித்து நிற்கிறது.
கடந்த மாதம் பிரயாக்ராஜியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உ.பி. அரசு மறைக்கிறது என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.