என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்ப்பம் தரிக்காத மருமகள் விஷம் கொடுத்து கொலை- மாமியார் மீது வழக்கு
- கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது.
- போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கவுசாம்பி:
உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் (வயது 33) என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் அவரது மாமியார், மருமகளிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார், தனது மருமகளின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிவிட்டதாக தெரிகிறது. உடனே இதுகுறித்து சாலி பேகம் தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது சாலி பேகம், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் நேற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்