search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் மக்களைக் கவர்வதற்கான பட்ஜெட்: ப.சிதம்பரம் தாக்கு
    X

    பீகார் மக்களைக் கவர்வதற்கான பட்ஜெட்: ப.சிதம்பரம் தாக்கு

    • பீகாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் இந்த பட்ஜெட் வரவேற்கப்படும்.
    • இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை கவர பா.ஜ.க. முயற்சிக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும், பீகார் மக்களையும் கவருவதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறது. இந்த பட்ஜெட்டானது பீகாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படும்.

    அதைத் தவிர பிற மாநில மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. எம்.பி.க்களின் கைத்தட்டல்களுடன் கூடிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் ஆறுதலான வார்த்தைகள் மட்டும்தான்.

    கடந்த 2024-25ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட வருவாய் ரூ.41,240 கோடியும், திருத்தப்பட்ட நிகர வரி வருவாய் ரூ.26,439 கோடியும் குறைந்துள்ளது. அதேபோல, மொத்த செலவினங்களும் ரூ.1.04,025 கோடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மூலதன செலவு ரூ.92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் சுகாதாரத் துறைக்கு ரூ.1,255 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.11,584 கோடியும், சமூகநலத் திட்டங்களுக்கு ரூ.10,019 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.10,992 கோடியும், கிராமப்புற மேம்பாடு ரூ.75,133 கோடியும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.18,907 கோடியும், வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ.1,894 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையோர் பிரிவினருக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×