search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்புபவர்கள் இந்தியை எதிர்க்கலாமா?: பவன் கல்யாண் கேள்வி
    X

    பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்புபவர்கள் இந்தியை எதிர்க்கலாமா?: பவன் கல்யாண் கேள்வி

    • இந்தியாவிற்கு 2 மொழி மட்டுமின்றி, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை.
    • சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

    ஐதராபாத்:

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பேசியதாவது:

    இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். தமிழ்நாட்டிலும் எங்களுக்கு அரசியல் ஆதரவாளர்கள் உள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் எங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

    தமிழ் மக்கள் எனது தெலுங்கு உரைகளைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்தேன். தமிழ் மக்கள் காட்டிய அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்-இது என்ன வகையான தர்க்கம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் இந்தி, தமிழ் மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்.

    Next Story
    ×