என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்: பிரதமர் மோடி அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்: பிரதமர் மோடி](https://media.maalaimalar.com/h-upload/2024/05/30/2392342-pm1.webp)
X
அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்: பிரதமர் மோடி
By
மாலை மலர்30 May 2024 7:39 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒடிசாவின் கேந்திரபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போகும் என்றார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் ஒரு புதிய உத்வேகத்துடன் நாடு வளர்ச்சி அடையும்.
அதே சமயம், அந்த 6 மாதங்களில் அரசியலில் மிகப்பெரிய சூறாவளியும் வரப்போகிறது.
குடும்ப கட்சிகளின் உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
அவர்களது தொடர் தோல்வி குறித்து சொந்த கட்சியினரே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.
எனவே அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
X