search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வியாழக்கிழமை ஸ்ரீநகர் செல்கிறார் பிரதமர் மோடி: மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
    X

    வியாழக்கிழமை ஸ்ரீநகர் செல்கிறார் பிரதமர் மோடி: மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

    • ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பாஜக-வின் தொடர்பு மேலும் வலுவடையும் வகையில் பயணம் இருக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டனர்- பாஜக தலைவர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி 19-ந்தேதி (வியாழக்கிழமை) ஸ்ரீநகர் செல்கிறார். அங்கு பாஜக-வினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பாஜக-வின் தொடர்பு மேலும் வலுவடையும் வகையிலும், பாஜகவின் தேர்தல் வியூகத்திற்கு முக்கிய முக்கியமானதாகவும் பிரதமர் மோடியின் வருகை இருக்கும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பொறுப்பாளர் ராம் மாதவ், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) அசோக் கவுல், ஸ்ரீநகர் மாவட்ட பாஜக தலைவர் அசோக் பாட் ஆகியோர் ஸ்ரீநகர் அலுவலகத்தில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக-வின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டனர். பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ராம் மாதவ் தெரிவித்தார்.

    கடந்த முறை பிரதமர் மோடி ஸ்ரீநகர் சென்றிருந்தபோது, தேர்தல் விரைவில் நடைபெறும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பிரதமர் மோடி ஸ்ரீநகர் செல்லும் நிலையில், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிப்பாரா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    Next Story
    ×