search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆளுநருடன் சந்திப்பு: ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா
    X

    ஆளுநருடன் சந்திப்பு: ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா

    • அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது.
    • டெல்லியின் புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களைக் கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியின் அடுத்த முதல் மந்திரி யார் என நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் டெல்லியின் புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா தனது ஆதரவாளர்கள் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதையடுத்து, அவரது மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×