என் மலர்
இந்தியா

X
மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே மகளுக்கு ஈவ்டீசிங்- காவல் நிலையத்தில் புகார்
By
மாலை மலர்2 March 2025 6:10 PM IST

- எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ?
- பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தனது மகள் அவரது நண்பர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
X