search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை- 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
    X

    மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை- 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

    • யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி உள்ளனர்.
    • எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.

    மகா சிவராத்திரியின்போது நடந்த சாந்த் முக்தாய் யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி, அவர்களை தரத்தி வீடியோ எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்

    இந்நிலையில், மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×