என் மலர்
இந்தியா

X
உ.பி.யில் மதுபானம் விற்பனை கடைகளுக்காக குவிந்த 3.65 லட்சம் விண்ணப்பங்கள்
By
மாலை மலர்27 Feb 2025 9:57 PM IST

- மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்நாடு, வெளிநாடு மதுபானங்கள் சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகை சில்லறைகள் கடைகள் திறப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உ.பி. மாநில அரசின் கலால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கட்டணமாக 1987.19 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 6-ந்தேதி குலுக்கல் மூலம் விண்ணப்பிதவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் எனத் கலால்துறை ஆணையர் ஆதர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Next Story
×
X