என் மலர்
இந்தியா

X
திருமண நாளில் காரில் சிலை போல் நின்று சாகசம் செய்த மணமகன்
By
மாலை மலர்14 March 2024 10:54 AM IST

- வீடியோவை பார்த்த போலீசார் விசாரணை நடத்தினர்.
- வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மணமகனின் காரை பறிமுதல் செய்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் சகாரன்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் மீது மாப்பிள்ளை அலங்காரத்துடன் ஒருவர் சிலை போல் நின்றபடி சாகச பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரில் மணமகன் அலங்காரத்தில் நின்றவர் மீரட் அருகே உள்ள குசாவலி கிராமத்தை சேர்ந்த அங்கித் என்பது தெரிய வந்தது. இவர் சகாரன்பூரில் உள்ள பைலா கிராமத்தில் இருந்து மணமகள் வீட்டிற்கு சென்ற போது ட்ரோன் மூலம் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மணமகன் அங்கித்தின் காரை பறிமுதல் செய்தனர். மேலும் ஓடும் காரில் சாகசம் செய்தது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X