search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்கள் தங்கள் பர்சில் கத்தி, மிளகாய் பொடி எடுத்துச் செல்ல வேண்டும் - மகா. அமைச்சர் அட்வைஸ்
    X

    பெண்கள் தங்கள் பர்சில் கத்தி, மிளகாய் பொடி எடுத்துச் செல்ல வேண்டும் - மகா. அமைச்சர் அட்வைஸ்

    • இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர்.
    • பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.

    இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் மகாராஷ்டிர அரசின் நீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஷிண்டே பிரிவு சிவசேனாவின் முக்கிய தலைவர் ஆவார்.

    ஜல்கான் நகராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய குலாப்ராவ் பாட்டீல், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

    குலாப்ராவ் பாட்டீல் கூறியதாவது, பெண்கள் தங்கள் பர்சில் மிளகாய்ப் பொடி மற்றும் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று வணக்கத்திற்குரிய பாலாசாகேப் தாக்கரே அறிவுறுத்தினார். இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர். ஆனால், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாலாசாகேப் கூறியதை பெண்கள் செய்ய வேண்டிய நேரம் இது.

    இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும்சூழலில், பெண்கள் புலிகளாக மாற வேண்டும். இன்றைய பெண்கள் பலவீனமாக இருக்கக்கூடாது. மாறாக வலிமையுடன் திகழ வேண்டும்.

    பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோரை நிறுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புனே பேருந்து நிலையத்தில் போலீஸ் சோதனைச் சாவடிக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் நின்றுகொண்டுருந்த அரசு சொகுசு பஸ்ஸுக்குள் வைத்து 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×