search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
    X

    3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

    • மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.
    • இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

    இப்போட்டியில் சமிக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.

    Next Story
    ×