என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
ரோகித் சர்மாவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் வாழ்த்து
By
மாலை மலர்10 March 2025 2:53 PM IST

- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை வென்றது. அதன்பிறகு 2002-ம் ஆண்டு இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
இந்நிலையில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். கடினமான போராட்டத்திற்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றிகள் என கூறியிருந்தார்.
Next Story
×
X